Government of India_Illustrative guideline towards COVID-19


Manufacturing Post Covid 19


Corona Virus Prevention and Safety Measures (COVID 19)


Science and Technology efforts in india


AYUSH Ministry


Immune booster foods for COVID 19

நுரையீரலைபலப்படுத்தும் இயற்கைமூலிகைகள்..

நுரையீரலை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்றை எதிர்த்துப் போராடமுடியும். நுரையீரலை பலப்படுத்த அதிலும் உடனடியாக பலப்படுத்த, செய்ய வேண்டிய விஷயங்களில் உணவு வகைகளும் அடங்கும்.

அதற்கு முன்பு நுரையீரல் குறித்து தெரிந்துகொள்வோம். மனிதன் சுவாசிக்க அத்தியாவசியமானது மூச்சு. உயிர்மூச்சு என்கிறோம். மூச்சு சீராக இருக்க காரணம் நுரையீரல் தான். இந்த நுரையீரைலைப் பாதிப்பில்லாமல் வைத்திருக்கும் வரை மூச்சு சீராக இருக்கும். உடலில் உள்ள முக்கியமான உறுப்பு நுரையீரல் தான். நாம் மூக்கின் வழியே சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியாகத்தான் நுரையீரலுக்கு செல்கிறது.

மூச்சுக்குழாய் மார்பு பகுதியில் இரண்டாக பிரிந்து நுரையீரலுக்கு செல்கிறது. நுரையீரல் பாதிக்கப்படும் பொது நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நுரையீரலை பலப்படுத்தும் பாரம்பரிய உணவுகளில் மருத்துவர்கள் அறிவுறுத்தும் உணவுகளைத் தவிர்க்காமல் எடுத்து கொள்வது நல்லது.

பால்_மிளகு + மஞ்சள்

கை வைத்தியத்தில் இருமலுக்கு கை கண்ட மருந்து இது. அந்த காலத்தில் இலேசாக இருமினாலே வீட்டில் மிளகு மஞ்சள் பால் முதல் வைத்தியமாக கிடைக்கும். சளி, அதஒ தொடர்ந்து இருமல் எல்லாமே மூச்சுகுழாய் நுரையீரல் சம்பந்தபட்ட பாதிப்பே என்பதை உணர்ந்தவர்கள் முன்னோர்கள்.

பாலை நன்றாக காய்ச்சி மிளகை நுணுக்கி அதில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குடித்துவந்தால் நுரையீரலுக்கு வலு கிடைக்கும். மஞ்சள் ஆன் டி ஆக்ஸிடெண்ட் தன்மை நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்ககூடியவை.

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிகழ்வதால் தற்போது உங்களை காத்துகொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு கப் பாலில் இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்த பால் குடித்துவருவது நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். மசாலா பால் என்பதால் குழந்தைகளும் குடித்துவிடுவார்கள். அதிக இனிப்புக்கு கூடுதலாக நாட்டுசர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

பால் + பூண்டு

பாலில் பூண்டு வேகவைத்து கொடுப்பது இளந்தாய்மார்களுக்கு. காரணம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கு என்பதுதான். பூண்டு இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு பொருள். பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் நுரையீரல் புற்று நோய் வருவதை தடுக்க முடியும். பூண்டில் இருக்கும் அலிசின் என்னும் ஆன்டி பயாடிக் சத்து நுரையீரல் தொற்றை உண்டாக்கும் வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது.

பூண்டு காரத்தன்மை கொண்டிருந்தாலும் இதை பாலில் குழைத்து வேகவைத்து சாப்பிடும் போது காரம் தெரியாது. வாரம் இரண்டு நாள் 5 டம்ளர் பாலில் 10 பல் பூண்டு வீதம் உரித்து வேகவைத்து 4 டம்ளராக சுண்டும் வரை வேக வைத்து குடித்தால் நுரையீரலில் தொற்று பரவாமல் வலிமையாக வைத்திருக்கலாம். சுவாசக்குழாயில் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவதற்கு பூண்டு நன்றாகவே உதவக்கூடும்.

கஷாயம்

மாதம் ஒரு முறை கஷாயம் என்று கடைப்பிடிக்கும் பலர் இன்றும் கிராமப்புறங்களில் உண்டு. உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க அவ்வபோது அதற்கேற்ற உணவு வகைகளை எடுத்துகொள்ள வேண்டும். அந்த வகையில் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக்கி குடிக்கும் கஷாயத்தை இந்த காலத்தில் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக இந்த கஷாயம் நுரையீரல் பலவீனமாக இருந்தாலும் அதை பாதுகாக்க உதவும்.

ஒரு டம்ளர் பாலுக்கு சிறு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சோம்பு, சீரகம் சேர்த்து சிட்டிகை மிளகுப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கவும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அளவு குறைத்து கொடுக்க வேண்டும். அதிக காரம் நிறைந்த இந்த கஷாயம் நுரையீரலை சுத்தப்படுத்த உதவும். வாரம் ஒரு முறை இந்த கஷாயம் குடிப்பதை தவறாமல் கடைபிடியுங்கள்.

இஞ்சியும், சுக்கும்

சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்று சொல்வார்கள். சுக்கு அவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இஞ்சியை காயவைத்தால் கிடைக்கும் சுக்கு நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். சுக்கு பொடியாகவும் கிடைக்கும்.

தினமும் டீ குடிக்கும் போது இஞ்சியை தட்டி சேர்த்து இஞ்சி டீயாகவோ, அல்லது சுக்கு காபியாகவோ குடித்து வருவது மிகவும் நல்லது. இஞ்சி நுரையீரலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் சிறப்பு குணங்களை கொண்டிருக்கும் பொருள். நுரையீரல் பலவீனத்தையும் அதன் வீக்கத்தையும் குறைக்க வல்லது. அதனால் தான் ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி உணவில் இஞ்சியை சேர்த்துவர வேண்டும் என்று சொல்வது.

நுரையீரலையும், சுவாசப்பாதையையும் சீராக்கும் இஞ்சியை சிறிதளவேனும் உடலுக்கு எடுத்துகொள்வது நன்மை தரும். குறிப்பாக இந்த வைரஸ் தொற்று பரவும் நேரத்தில் உங்களை பாதுகாக்கும் கவசமாகவே இஞ்சியை சொல்லலாம்.

ஆடாதோடை

செடியாகவும் மரமாகவும் இருக்கும் இது மூலிகை குணங்கள் நிறைந்தது. இவை எங்கு நிறைந்திருக்கிறதோ அங்கு ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அதனால் தான் ஆடாதோடை ஆயுள் மூலிகை என்று அழைக்கப்படுகிறது.

ஆடாதோடைஇலையை பறித்து கஷாயமாக்கி குடிப்பார்கள். அது மட்டுமல்லாமல் ஆடாதோடை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். சிறு குழந்தைகளுக்கு அவ்வபோது சளி வந்தால் ஆடாதோடை இலையை உலரவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும். அரைடீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு ஆடாதோடை பொடியை குழைத்து நாக்கில் தடவ வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியமாக பலமாக இருக்கும்.

துளசி

துளசி எப்போதுமே சளி இருமலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள். காலையில் வெறும் வயிற்றில் துளசியை நன்றாக மென்று சாறை விழுங்கினால் அதன் சாறு இறங்க இறங்க சுவாசக்குழாயிலும் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும். சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள் ஒரு மண்டலத்துக்கு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் சுவாசப்பிரச்சனை சீராகும்.

ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுபவர்கள் துளசியை சாப்பிட்டால் நுரையீரலை காப்பாற்றும். அதில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். நாள்பட்ட ஆஸ்துமா நோய் கூட கட்டுப்படுத்தும். துளசி சாறில் தேன் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். வறட்டு இருமல் சளி இருமல் இருப்பவர்கள் துளசியை மென்றாலே பலன் காணலாம். தற்போது கோவிட் தொற்று பிரச்சனை வராமல் இருக்கவும் நுரையீரலை பலப்படுத்தவும் இந்த உணவுகள் நிச்சயம் தேவை என்றே சொல்லவேண்டும்.

 

கொரோனாவிற்கு ஏன் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை ??

 

ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிப்பு ன்னு அரசு அறிவித்ததும் மக்களுக்கு எழுந்த ஒரே கேள்வி !!

“அட ச்ச…. எவ்ளோ நாள் தான் வீட்லயே இருக்குறது??? இந்த கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபுடிச்சா தான் என்ன” ??

இது ஒரு நியாயமான ஆதங்கம் தான். இதற்கான தெளிவான பதில் தேவை-ன்னா அப்டியே காலச்சக்கரத்தை சுழற்றி கொஞ்சம் பின்நோக்கி போகலாம்.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றிய இனம் தான் இந்த வைரஸ். (நமக்கெல்லாம் சீனியர் இவர்!!)

நாம எப்படி கற்காலத்துல இருந்து கூகிள் காலத்துக்கு ஏற்ற மாதிரி நம்மை தகவமைச்சிட்டு வளர்ந்தோமோ, அதே மாதிரி வைரஸும் பல்வேறு தகவமைப்பை மேற்கொண்டு வளர்ச்சியடைந்தது.

இந்த வைரஸ் இருக்கு-ல்ல, இதனோட மரபணு DNA அல்லது RNA இவற்றில் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கும்.

இந்த RNA வைரஸ் கிருமி DNA வைரஸ் கிருமிகளை விட கொஞ்சம் சவாலானது. (கொரோனா ஒரு RNA வைரஸ்)

எப்டின்னு சொல்றேன் கேளுங்க !!

இந்த DNA வைரஸ் தன்னுடைய உருவ அமைப்பு மற்றும் மரபணு செயல்பாட்டை பெரிதாக மாற்றிக்கொள்ளாது.

ஆனா RNA வைரஸ் அப்படி இல்லை. அடிக்கடி தன்னுடைய மரபணு செயல்பாடு, உருவம், அதில் உள்ள புரதம் ன்னு எல்லாத்தையும் கண்டபடி மாத்திக்கும். இதை ‘Mutation’ ன்னு கூறுவோம். கிட்டத்தட்ட மாறுவேஷத்துல சுத்துற கதை தான்.

‘DNA Proofreading’ ன்னு ஒரு வார்த்தை உண்டு. அதாவது, மரபணு செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் நிகழும் சூழல் ஏற்பட்டால் அது நிகழாத வண்ணம் ஒரே நிலையில் மாறாமல் இருப்பது தான் Proofreading. இந்த குணாதிசயம் பல DNA வைரஸ்களுக்கு உண்டு.

ஆனால், அந்த குணம் RNA வைரஸ்களுக்கு இல்லை. அதனால் தனக்குள் எந்த மாறுதல் நிகழ்ந்தாலும் அது கண்டுகொள்ளாமல் Mutate ஆகி மாறிக்கொண்டே இருக்கும்.

ஆகவே, RNA வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது சற்று சவாலான விஷயமாக உள்ளது.

ஒரு முறை வைரஸ் தாக்கினால் அது அடுத்த முறை தாக்கும் பொழுது அதே குணாதிசயங்கள் கொண்டிருக்கும் ன்னு நிச்சயமாக சொல்ல முடியாது !! அது Mutate ஆகி மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு புதிய விதமாக தாக்கும். அதனால் தான்
சீரான இடைவெளிகளில் BOOSTER DOSE தடுப்பூசிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

Booster Dose தடுப்பூசி அறிவுரை செய்ய இரண்டு மிக முக்கிய காரணங்கள் உண்டு.

1.முதல்ல தடுப்பூசி எப்படி வேலை செய்யுது-ன்னு பாப்போம்!!!

“நோயை உண்டாக்கும் வைரஸ் நம் உடலை தாக்கும் முன்பாகவே, நாம் அதே வைரஸின் நோய் தாக்கும் திறனை நீக்கிவிட்டு, ஆய்வங்கங்களில் அவற்றை மேலும் சில மாறுதல்களுக்கு உட்படுத்தி பாதுகாப்பான “வலுவிழந்த வைரஸ்” கிருமியை உடலில் செலுத்துவோம்.

இப்போ, உடலில் செலுத்திய வலுவிழந்த வைரஸ் நோயை உண்டாக்காது. ஆனால், உடலில் ஏதோ ஒரு அந்நிய சக்தி வந்துவிட்டதே-ன்னு நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அதை கண்டறிந்து அதற்கு எதிராக போரிட வெள்ளை அணுக்களை(WBC) கட்டளையிடும். வைரஸுக்கு எதிராக போரிடும் எதிர்ப்புசக்தியை நாம் பெற்றுவிடுவோம்.

ஒருமுறை வைரஸ் நமது உடலை தாக்கியதால் அந்த வைரஸ் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு நியாபகத்தில் வைக்கப்படும். இதை ‘Cognition’ என்று கூறுவோம்.

ஒருவேளை, சிறிது நாட்கள் கழித்து நோயை உண்டாக்கும் வைரஸ் தாக்கினால், நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி, நியாபக சக்தி ஆகிய இரண்டையும் ஏற்கனவே பெற்றுவிட்டதால் வைரஸை எளிதில் கண்டறிந்து போரிட்டு வெற்றி பெரும். இது தான் தடுப்பூசியின் வேலை.

தடுப்பூசி போட்ட சில வருடங்களில், அந்த குறிப்பிட்ட வைரஸுக்கு எதிராக உடலில் உருவான Cognition குறையும். நோய் எதிர்ப்பு திறன் மங்கும். இவை மீண்டும் வலுப்பெறவே இந்த Booster Dose தடுப்பூசி அவசியமாகிறது.

2. இரண்டாவது காரணம் நான் ஏற்கனவே கூறிய Mutation. வைரஸ் கிருமிகள் சில வருட இடைவெளிகளில் தன்னைத்தானே மாறுதல்களுக்கு உட்படுத்திக்கொண்டு மாறுவேடமணிந்து தாக்கும். (உதா- இன்ப்ளூயன்சா)!! மாறுபட்ட வைரஸின் கிருமித்தொற்றை எதிர்க்கவே சிறிது மாற்றம் செய்யப்பட்ட தடுப்பூசிகள் சீரான இடைவெளியில் தரப்படுகின்றன.

இந்த கொரோனா வைரஸ் RNA வைரஸ். தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தாலும் பலருக்கு இந்த வைரஸ் கிருமி தாக்கும். ஏனென்றால் இது வீரியம் மிகுந்த வைரஸ். ஆகவே தான் வீட்டிலிருக்க அறிவுரை செய்கிறோம்.

மனித இனத்தை சுமார் 2700 ஆண்டுகளாக வதைத்து 300 மில்லியன் மக்களின் உயிரை பறித்த பெரியம்மை நோய்க்கு 1796-ல் தான் ‘எட்வர்ட் ஜென்னர்’ தடுப்பூசி கண்டுபிடித்து பெரியம்மையை உலகை விட்டே விரட்டினார்.

நாம் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறிய 2700 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவியல் வேகமாக முன்னேறி வருகிறது. கண்டுபிடிப்புகளும் மிக வேகமாக நிகழும். இன்னும் சில மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்.

யார் கண்டது?? கொரோனா வைரஸ் தன்னை மாறுதல்களுக்கு உட்படுத்திக்கொண்டு வீரியம் குறைந்த வைரஸாக மாறவும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால், இவை எல்லாம் எதிர்காலம் குறித்த பார்வை. இதை அறிவியலின் கையில் விட்டுவிடுவோம்.

மக்களாகிய நாம் நிகழ்காலத்தில் செய்ய வேண்டியவை என்ன ??

நம்மை சுத்தமாக வைத்துக்கொண்டு, சுய ஒழுக்கத்துடன் செயல்பட்டு வீட்டிலேயே தங்கி வைரஸை நம்மிடம் அண்ட விடாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே.

அறிவியலின் பக்கம் நிற்போம். கொரோனாவை வெல்வோம் !!

நன்றி❣️